Sunday, April 18, 2010
வலியை தேடி!!!!!!!!!!
அனுபவத்தை(வலியை) ஆறுதலுக்காக(வரிகளாய்)
கிறுக்கினான் கிறுக்கல் கோலமாய், வார்த்தைகள் வரிகளாய்
வரிகள் கவிதையாய், நீர்த்துளி அருவியாய்
கோலத்திற்காக(கவிதைக்காக) கோல(கவிதை)
புத்தகங்களை புரட்டினான்
கோலங்கள் புள்ளியாய், கவிதைகள் வரிகளாய்
வரிகள் வார்த்தையாய், அருவி நீர்துளியாய்...
முன்னே செல்லாமல் புள்ளி.... முற்று புள்ளியானது..
புரிந்தது அவன் ஓவியனல்ல உருவத்தை வரைய
கவிஞனல்ல கற்பனையை கவிதையாக்க..
தாய் பிரசவிக்க கருவேண்டும், கருவுக்கு உருவேண்டும் ,
உருவுக்கு உயிர்வேண்டும், உயிர் இதய துடிப்போடும்
துன்பத்தோடும்(பிரசவ வலியோடும்) வெளிவரவேண்டும்.....
வலிஇல்லாமல் அவனுக்கு வார்த்தையில்லை
வார்த்தை இல்லாமல் அவனுக்கு கவிதை இல்லை...
Subscribe to:
Post Comments (Atom)
Classy...
ReplyDelete